தன்மானத்திற்கு வெகுமானம்
தாயின் கருவில் வளரும்போதே - தன்
மானமும் வளர்ந்ததுவே - பின்பு
தரைக்குவந்த நாள்முதலாய்- அதுவும்
தவழ்ந்து வந்ததுவே !
தாழ்வாய்ப் பார்த்த யாரையுமேயது
தட்டிக்கேட்டதுவே- உயிர்
எட்டிப்பார்த்ததுவே - மனம்
திட்டம் போட்டதுவே !
நமக்கு யாரடா முதலாளி- நாம்
அனைவரும் இயற்கையின் தொழிலாளி
தனியொரு மனித ஜடத்தின்
முன்னேச்சென்று
கைகட்டி நிற்பதுவோ
மெய்ச்சுருக்கி அவன்சொல் கேட்பதுவோ?
ஊர்க்காக்கும் காவலனைக்கண்டு
பயந்து ஓளிந்து ஓடுவதோ - பெருங்
கடல்தனிலேச் சென்று
உப்பினைத் தேடுவதோ-பெண்
கற்பினைப் பாடுவதோ?-உன்
தப்பினைச் சாடுவதோ?..
மூன்றுவேளையும் உனக்குத்தேவை
நல்லவித உணவு
உன்னகத்தே சுத்தமாக
இல்லையொரு கனவு
எங்கேயும் யாரிடத்தும்
யாதென்று வினவு
எப்போது என்கனவு
ஆகுமொரு நனவு - உன்
கண்களிலே எப்போதும்
தெரியவேண்டும் வீரம்- உன்
பின்னோரும் உணரவேண்டும்
அதனுடைய சாரம் - உன்
எதிரிக்கும் மிகுதியாக
இருக்கவேண்டும் தகுதி
ஏழையாகப் பிறந்தாலும்
கோழையாக இறக்காதே!
உழைக்கும் கரங்கள்
உயர்ந்திட வேண்டும் -மனித
உறவுகள் இன்னும்
உரம்பெற வேண்டும் -பிறரை
அண்டிப்பிழைக்கும்
அடிமை வாழ்க்கை
அறவே இங்கே
அழிந்திட வேண்டும்
பாசத்தால் யார்
பரிவு செய்தாலும்
பாதம்பணியும்
மேன்மை வேண்டும்
பாதக நெஞ்சோர்
பக்கத்தில் வந்தால்
பதறவைக்கும்
ஆண்மைவேண்டும்
பாரதத்தாயைப்
பழிப்பவர் கண்டால்
பாம்பென் றெண்ணிப்
பிளந்திட வேண்டும்!!!
-ஆனந்தன்
தாயின் கருவில் வளரும்போதே - தன்
மானமும் வளர்ந்ததுவே - பின்பு
தரைக்குவந்த நாள்முதலாய்- அதுவும்
தவழ்ந்து வந்ததுவே !
தாழ்வாய்ப் பார்த்த யாரையுமேயது
தட்டிக்கேட்டதுவே- உயிர்
எட்டிப்பார்த்ததுவே - மனம்
திட்டம் போட்டதுவே !
நமக்கு யாரடா முதலாளி- நாம்
அனைவரும் இயற்கையின் தொழிலாளி
தனியொரு மனித ஜடத்தின்
முன்னேச்சென்று
கைகட்டி நிற்பதுவோ
மெய்ச்சுருக்கி அவன்சொல் கேட்பதுவோ?
ஊர்க்காக்கும் காவலனைக்கண்டு
பயந்து ஓளிந்து ஓடுவதோ - பெருங்
கடல்தனிலேச் சென்று
உப்பினைத் தேடுவதோ-பெண்
கற்பினைப் பாடுவதோ?-உன்
தப்பினைச் சாடுவதோ?..
மூன்றுவேளையும் உனக்குத்தேவை
நல்லவித உணவு
உன்னகத்தே சுத்தமாக
இல்லையொரு கனவு
எங்கேயும் யாரிடத்தும்
யாதென்று வினவு
எப்போது என்கனவு
ஆகுமொரு நனவு - உன்
கண்களிலே எப்போதும்
தெரியவேண்டும் வீரம்- உன்
பின்னோரும் உணரவேண்டும்
அதனுடைய சாரம் - உன்
எதிரிக்கும் மிகுதியாக
இருக்கவேண்டும் தகுதி
ஏழையாகப் பிறந்தாலும்
கோழையாக இறக்காதே!
உழைக்கும் கரங்கள்
உயர்ந்திட வேண்டும் -மனித
உறவுகள் இன்னும்
உரம்பெற வேண்டும் -பிறரை
அண்டிப்பிழைக்கும்
அடிமை வாழ்க்கை
அறவே இங்கே
அழிந்திட வேண்டும்
பாசத்தால் யார்
பரிவு செய்தாலும்
பாதம்பணியும்
மேன்மை வேண்டும்
பாதக நெஞ்சோர்
பக்கத்தில் வந்தால்
பதறவைக்கும்
ஆண்மைவேண்டும்
பாரதத்தாயைப்
பழிப்பவர் கண்டால்
பாம்பென் றெண்ணிப்
பிளந்திட வேண்டும்!!!
-ஆனந்தன்

No comments:
Post a Comment