Wednesday, August 8, 2012

மனதுடன் போராட்டம்


மனதுடன் போராட்டம்

தெளிவான மனநிலையைப் 
பற்றிக்கொள் மனமே !
குரங்கைப்போல் அங்குமிங்கும் 
தாவாதே மனமே !
எப்போதும் ஓர் நிலையில் 
இருந்துவிடு மனமே !
என்றென்றும் உன் தலைவன் 
நான்தானே மனமே !

தப்பென்றால் உடனேயே 
உரைத்துவிடு மனமே ! 
சஞ்சலங்கள் எவற்றிற்கும் 
இடம்கொடாதே மனமே !- நான் 
சொல்லாமல் நீயாகச் 
செல்லாதே மனமே !

அச்சத்தினை துச்சமாக 
மதித்துவிடு மனமே ! 
ஆசையினை அதிகமாக 
வளர்த்துவிடு  மனமே !-அதை 
அடைந்துவிடும் வழியினையும் 
அளித்துவிடு மனமே ! 

காதலினைக் கருவிலேயேப் 
புதைத்துவிடு மனமே !
வெற்றியினை மனதிலேயே 
விதைத்துவிடு மனமே !

நீ ஜெயிக்கும் நாளும் தான் 
தூரமில்லை மனமே ! 
வென்றுவிட்டால் என்றென்றும் 
என்னுடைய தினமே !
சாதிக்காமல் வேகாது 
என்னுடையப் பிணமே...
சரித்திரத்தில் என்பெயரும் 
வருவதுவும் நிஜமே !!!!

                                                                                                                   -ஆனந்தன்




No comments:

Post a Comment