மனதுடன் போராட்டம்
தெளிவான மனநிலையைப்
பற்றிக்கொள் மனமே !
குரங்கைப்போல் அங்குமிங்கும்
தாவாதே மனமே !
எப்போதும் ஓர் நிலையில்
இருந்துவிடு மனமே !
என்றென்றும் உன் தலைவன்
நான்தானே மனமே !
தப்பென்றால் உடனேயே
உரைத்துவிடு மனமே !
சஞ்சலங்கள் எவற்றிற்கும்
இடம்கொடாதே மனமே !- நான்
சொல்லாமல் நீயாகச்
செல்லாதே மனமே !
அச்சத்தினை துச்சமாக
மதித்துவிடு மனமே !
ஆசையினை அதிகமாக
வளர்த்துவிடு மனமே !-அதை
அடைந்துவிடும் வழியினையும்
அளித்துவிடு மனமே !
காதலினைக் கருவிலேயேப்
புதைத்துவிடு மனமே !
வெற்றியினை மனதிலேயே
விதைத்துவிடு மனமே !
நீ ஜெயிக்கும் நாளும் தான்
தூரமில்லை மனமே !
வென்றுவிட்டால் என்றென்றும்
என்னுடைய தினமே !
சாதிக்காமல் வேகாது
என்னுடையப் பிணமே...
சரித்திரத்தில் என்பெயரும்
வருவதுவும் நிஜமே !!!!
-ஆனந்தன்

No comments:
Post a Comment