Thursday, January 12, 2012

கருமக் காதல்

          
                          
                    கருமக் காதல்

காதல் வேண்டாம் காதல் வேண்டாம் 
கலங்கச் செய்யும் காதல் வேண்டாம்
கண்ணாடிப்போல் எந்தன் மனது- அதைக்
கல்லாலுடைக்கும் காதல் வேண்டாம்

கேடுகெட்ட எந்தன் மனமே
எதற்கு நினைத்தாய் அவளை
கேவலமானது காதல் உணர்வு
இனிமேல் வேண்டாம் கவலை

ஏன்டா இந்த உணர்வுவந்து
ஆட்டிப்படைத்து என்னை 
வேண்டாவெறுப்பாய் சுமந்திருந்தேனோ- என்காதல்
இன்று அடைந்தது மண்ணை

எந்தனருகில் நிற்கக்கூட
தகுதியில்லை உனக்கு- இனி
உந்தன்நிழலை நினைக்கக்கூட
உரிமையில்லை எனக்கு

யாரோப்பெற்ற பெண்ணுக்காக
நீயேன் உருகிநின்றாய்
உந்தன்வாழ்வில் ஒருசில ஆண்டை
முழுதாய் நீயும் தின்றாய்

பெண்ணின் அழகில் மயங்கிநீயும்
பித்தனாகவில்லை- உன்
உள்ளம் என்பதன் உணர்ச்சிப்பெருக்கால்
உணர்ந்தாய் வாழ்வின் எல்லை

அன்றாடம் உன்னையது
ஏங்கவைக்கும்
அடுக்கடுக்காய் அவப்பெயரை
வாங்கவைக்கும்
எப்போதும் பகற்கனவில்
தூங்கவைக்கும்- தன்
மானத்தை உன்னைவிட்டு
நீங்கவைக்கும்

காதலது உன்செருப்பில்
ஒட்டியிருக்கும் தூசி- அது
எப்போதோ உன்மனதில்
பட்டிருக்கும் யோசி
நேரத்தைப் போக்காதே
கனவுடனேப் பேசி- உன்னை 
வாழவைக்கும் லட்சியத்தை
மனதாலே நேசி 

அழகுப்பெண்கள் இதயமெல்லாம்
அடைந்திருக்கும் கல்லடா- அதை
அடைய நினைத்தால் உடைந்துவிடும்
உன்னுடையப் பல்லடா
பெண்ணைத்தேடி தெருவில் ஓடும்
புத்திக்கெட்ட மானிடா
உன்னைத்தேடி உலகம்வரும்
நாளுமெந்த நாளடா???????

                                                                            -ஆனந்தன்


No comments:

Post a Comment