உணர்வருவி 
-ஆனந்தன்

நடந்தால் கிடைக்க வாய்ப்புண்டு
கிடந்தால் ஒன்றும் கிடைக்காது
கிளம்பிஎங்கும் செல்லாமல்
புலம்பித் துளியும் பயனில்லை - வெற்றிப்
பசியில் நீயும் அலைந்தால்தான்- அதன்
ருசியை வாழ்வில் அடைந்திடுவாய்...
மரணம் என்றும் உனக்காக
சரணம் செய்துப் போகாது - உன்
நெஞ்சின் சபதம் நிறைவேற
அஞ்சாமல் நீ செயல்படுவாய்
நேற்றுவரையில் இங்கே நீ
தோற்றதை எல்லாம் மறந்திடுவாய்
நாளை வெற்றிப்பாதையிலே - உன்
காலைவைத்துப் பார்த்திடவே
வீறுகொண்டு எழுந்திடுக - வியர்வைச்
சாறில் விடியல் அடைந்திடுக...
வாய்ப்புகளென்றும் உன்வீட்டின்
வாசல்படியைத் தட்டாது
வெற்றியின் வெறியும் குறைந்தாலே - உன்
லட்சியமென்றும் கிட்டாது
வெம்பிப் போனாலோ வெற்றி மண்ணோடு
வாழ்க்கையிலே வென்றவர்கள்
வலியின்றி வென்றதில்லை
வலிகண்டு அஞ்சியவன்
வெற்றிக்கனி தின்றதில்லை
தரித்திரமென்று எதுவுமில்லை- நீ
சரித்திரம் படைககவேப் பிறந்தபிள்ளை
மனதில் தளர்ச்சி கொண்டால் - உனக்கு
உலகில் வளர்ச்சியில்லை
உலகில் வளர்ச்சியில்லை
முகத்தில் மலர்ச்சி கொண்டால் - உன்னை
மதிக்காதோர் யாருமில்லை
யுகங்களெல்லாம் மாறிவிடும்- மனித
முகங்களுமிங்கே மாறிவிடும்
நீயுமோர் நாள் இறந்துபோவாய் - சேர்த்த உன்
புகழது மட்டும் சிறந்து நிற்கும்
சோம்பலாக நீயிருந்தால்- உன்
சாம்பல்கூட மதிக்காது
உனக்காக எப்போதும் திறந்திருக்கு கதவு- மனம்
பிணக்காக இல்லாமல் பிறருக்கு உதவு
உயிரினைவிட உழைப்பினை நேசி
காதலினைவிட கடமையினை நேசி
சாமியைவிட சேமிப்பை நேசி
கணினியை நேசி தமிழினை சுவாசி!!!!
-ஆனந்தன்
No comments:
Post a Comment