தலைவன் வருவான்
அறிவிலேத் தெளிவு
அகந்தையற்ற பணிவு
கருத்திலே உறுதி
கனல்கொண்டக் குருதி
நெஞ்சிலே ஈரம்
நிகரற்ற வீரம்
கலைகளில் களிப்பு
களைப்பற்ற உழைப்பு
வாலிபத்தின் வலிமை
வாழ்க்கையிலே எளிமை
விழிகளிலே நெருப்பு - போகும்
வழிமுழுதும் சிறப்பு
அரசாலும் திறமை - மக்கள்
மனசாளும் பெருமை
மலையொத்த தன்மானம் - கடல்
அலையொத்தப் போராட்டம்
நேர்மைக்கிவன் வேந்தன் - புத்திக்
கூர்மைமிகு காந்தன்
தன்னலத்தைத் தவிர்த்த - தாய்
மண் நலத்தில் லயித்த
மன்னவனும் வருவான் - மன
நிம்மதியைத் தருவான்
வருவான் வருவான்
விரைவாக - உங்கள்
வாழ்க்கை ஆகிடும்
நிறைவாக!!!
-ஆனந்தன்

nitchayamaaga varuvaan kavignare!!! nam thalaivan....
ReplyDelete